சிவனை வர்ணிக்கையிலே, நாம் அவனது பண்பு மற்றும் வடிவினை எடுத்து விளக்காமல், அவனது உருவகங்களையே எடுத்து விளக்கினோம். ஏனெனில் மனித இயல்பினைப் புரிந்துகொள்வதென்பது சுலபமான காரியமல்ல. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடையே பொதுவான பல தன்மைகளைக் காண முடிகிறது.
நமது சம்பிரதாயங்களில், சிவன் ‘அவதாரம்’ ஏற்பதில்லை. மாறாக, விஷ்ணுவோ பல அவதாரங்கள் ஏற்று வருகிறான். இதற்கென்ன காரணம்? நாம் குடும்பத்திலோ அல்லது ஓர் அமைப்பிலோ வெவ்வேறு கதாபாத்திரங்களாக அங்கம் வகிக்கிறோம். ஆனால் ஒரு தனி நபராக, நாமே நம்மிடத்தில் நடிக்க வேண்டிய தேவையில்லை. தனி மனித லட்சணத்திற்கான அவ்வடையாளமாய் சிவன் விளங்குகிறான்.










