சிவ-ராம-கிருஷ்ணன்: ராமனின் குடும்பப் பண்புகள்
தசரதன் ராமனைக் காட்டிற்குச் செல்லும்படி அறிவித்ததை ராமன் கௌசல்யா தேவியினிடத்தில் தெரிவித்தபின் அவளை ராமன் தேற்றுகிறான். அப்போது கௌசல்யா தேவியை தகப்பனைவிட தாயே நூறு மடங்கு உயர்ந்தவளென்றும், அதனால் தன் இச்சைப்படி ராமன் அவளையும் காட்டிற்குக் கூட்டிச் செல்ல வேண்டும் என்றும் கூறுகிறாள். ஆனால், இவ்விதம் நிகழ்ந்துவிட்டாலோ குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுவிடும். இதனை உணர்ந்த ராமன் தார்மீகமான, சாதுரியமான வழியில் அவனது தாயைக் கையாளுகிறான். அவன் அவளிடம், “முதலில் தாங்கள் என் தந்தைக்கு மனைவி, அதன் பிறகே எனக்குத் தாய். அதனால் தாங்கள் மகனுடன் இருப்பதைவிட தங்களது கணவனுடன் வசிப்பதே சாலச் சிறந்தது.