Culture

உபநயனம் – சில சடங்குகள்

தண்டம்-கோல்[1]

ஆசாரியர் மாணவனுக்கு தண்டத்தை(கோலை) வழங்கும்போது, அவன், "எனது தண்டம் கீழே விழுந்துவிட்டது, அதனை நான் எனக்கு நீண்ட ஆயுள் கிட்ட வேண்டியும், பிரம்மசரிய மார்க்கத்தில் என்னை வழிநடத்தவும், எனது மாணவ-வாழ்க்கையின் துவக்கத்தைக் குறிக்கவும் மீண்டும் என் கையில் எடுத்திருக்கிறேன்", என்று கூறி தண்டத்தைப் பெற்றுக் கொள்கிறான்.[2] உடல், மனம், வாக்கு இவைகளின் கட்டுப்பாட்டை 'தண்டம்' உணர்த்துகிறது.

யக்ஞோபவீதம் (பூணூல்)

மேகலை அணிவித்தபின் அச்சிறுவனுக்கு பூணூல்(யக்ஞோபவீதம்) அணிவிக்கப்படுகிறது.[1] யக்ஞோபவீதம் என்பது பவித்திரமான பூணூல் என்று இப்போதை உள்ளதைப்போல அப்போதெல்லாம்  கருதப்பட்டு வந்ததாகத் தெரியவில்லை[2], எனினும் பிற்காலங்களில் இதுவே உபநயன சடங்கில் கவனத்துக்குரிய பிரதான கட்டமானது.[3] பிற்காலங்களில் இளம் வடுவுக்குப் பூணூலை வழங்கி அவனை, "யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம்", என்கிற பிரபலமான வரியை உச்சரிக்கச் செய்தார்கள்.

Monthly Magazines; GTA Press

It can be surely said that the rejuvenation of modern Kannada literature started during the regime of Krishnaraja Wodeyar III. The mahārāja offered shelter and patronage to several vidvāns (scholars). The scholars in his court—i.e. āsthāna-vidvāns—rendered their service to literature by translating into Kannada great works like Rāmāyaṇa, Mahābhārata, Bhāgavata, and other devotional texts (bhakti sahitya).

உபநயனத்திற்கான ஏற்பாடுகள்; நிறைவேற்றுதல்

உபநயனத்திற்கான ஏற்பாடுகள்[1]

உபநயனம் நடைபெற ஒரு śālā (விதானம், கூடாரம்) அமைக்கப்படுகிறது.[2]

உபநயனத்துக்கு முன் புராண நிகழ்ச்சிகள் சில நடைபெறுகின்றன. விநாயகனை வணங்கியபின், ஸ்ரீ, லக்ஷ்மி, திருதி (Dhṛtī), மேதா, புஷ்டி, ஸ்ரத்தா (Śraddhā), மற்றும் சரஸ்வதி முதலான தேவிமார்களை வழிபடுகிறார்கள்.[3] பொதுவாக, இதோடுகூட உதக சாந்தி மந்திரங்களும் ஓதப்படுகின்றன.

உபநயனம் நடைபெறச் சரியான வயது

ஒரு பாலகனுக்கு உபநயனம் நடத்த தகுந்த வயது குறித்த கோட்பாடுகள் வித்தியாசப்படுவதைக் காண்கிறோம்(அந்த பாலகனை ‘vaṭu’ என்றழைக்கின்றனர்).[1] இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அவ்வயது கருத்தாக்கத்திலிருந்து கணிக்கப்படுகிறது என்பதே.[2] குழந்தையின் வயதைக் கணிக்கும் வழக்கம் பாரத தேசத்தில் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.

Bhajan Organizations

What I’m writing about now dates back to the situation in Bangalore c. 1905–10. At that time, there were also a few music institutes in existence. The Doddanna Sabha Mandira had not yet been established at that time. Just as the London Mission High School was the focal point for all literature and science, Sahuji’s rooftop in Chickpet was the centre for music. The music concerts of Bangalore Nagarathnamma, Veena Sheshanna, Bidaram Krishnappa, and [Mysore] K Vasudevacharya were conducted in the first floor of Sahuji’s house.

உபநயனத்திற்கான தகுதி

பிராம்மண, க்ஷத்ரிய, வைஷ்யர்களிலுள்ள ஆடவர்கள் மாத்திரமே வேதம் பயில தகுதி பெற்றவர்கள் என்று நம் மூதாதையர்கள் பலர் கருதி வந்தனர்.[1] உபநயனம் என்பது வேதம் கற்பதற்கான சடங்காக அமைந்ததால் அனைத்து வர்ணத்தாரினது பெண்களுக்கும், சூத்திரர்களுக்கும் உபநயனம் செய்விக்கப்படவில்லை.[2]

சூத்திரங்களிலும், ஸ்மிருதிக்களிலும் உபநயனம்

அநேகமாக சூத்திர (Sūtra) காலத்தில்தான் உபநயனச் சடங்கு முழுதும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கக்கூடும்.[1] கிருஹ்ய சூத்திரங்களில் (gṛhya-sūtras) அச்சடங்கில் அரங்கேறும் பெரும்பாலான விவரங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இதனில் கூறப்பட்டுள்ள சடங்கே பிற்கால தர்ம சூத்திரங்களிலும், ஸ்மிருதிக்களிலும் எவ்வித மாற்றமும் இன்றி இடம்பெற்றுள்ளன; இச்சடங்கின் சமூகக் கண்ணோட்டத்தை பரைசாற்றுவதே அவற்றின் முதன்மை நோக்காக அமைந்தது. அநேகமாக இக்காலகட்டத்தில்தான் முதல் மூன்று வர்ணத்தாருக்கும் உபநயனம் அவசியம் என்ற கருத்து ஏற்பட்டிருக்க வேண்டும்.

வேதங்களில் உபநயனம்

ஸம்ஹிதைகளில் உபநயனம்

கிருஹ்ய சூத்திரங்களில் குறிக்கப்படும் உபநயனத்துக்கான அம்சங்களை ரிக் வேத ஸம்ஹிதையிலேயே நம்மால் காண முடிகிறது.[1] பலி பீடமான  யூப ஸ்தம்பத்தை (yūpa-stambha) இளைஞனாகப் போற்றுகிறார்கள் – “மேகலை அணிந்து அழகாய் அலங்கரிக்கப்பட்ட பாலகன் இதோ வருகிறான் (மேகலை அணிந்த பாலகனை ரசானுபாவமாக யூப ஸ்தம்பத்தோடு இங்கே ஒப்பிடுகிறார்கள்); இப்பிறப்பால் உயர்நிலை அடைகிறான்; தேவதைகளை வணங்கி வழிபடும் ரிஷிகள், பெரும் மகிழ்ச்சிகொண்டு அவனை வளரச் செய்கின்றனர்.”[2]