உபநயனம் – சில சடங்குகள்
தண்டம்-கோல்[1]
ஆசாரியர் மாணவனுக்கு தண்டத்தை(கோலை) வழங்கும்போது, அவன், "எனது தண்டம் கீழே விழுந்துவிட்டது, அதனை நான் எனக்கு நீண்ட ஆயுள் கிட்ட வேண்டியும், பிரம்மசரிய மார்க்கத்தில் என்னை வழிநடத்தவும், எனது மாணவ-வாழ்க்கையின் துவக்கத்தைக் குறிக்கவும் மீண்டும் என் கையில் எடுத்திருக்கிறேன்", என்று கூறி தண்டத்தைப் பெற்றுக் கொள்கிறான்.[2] உடல், மனம், வாக்கு இவைகளின் கட்டுப்பாட்டை 'தண்டம்' உணர்த்துகிறது.