வேதங்களில் உபநயனம்
ஸம்ஹிதைகளில் உபநயனம்
கிருஹ்ய சூத்திரங்களில் குறிக்கப்படும் உபநயனத்துக்கான அம்சங்களை ரிக் வேத ஸம்ஹிதையிலேயே நம்மால் காண முடிகிறது.[1] பலி பீடமான யூப ஸ்தம்பத்தை (yūpa-stambha) இளைஞனாகப் போற்றுகிறார்கள் – “மேகலை அணிந்து அழகாய் அலங்கரிக்கப்பட்ட பாலகன் இதோ வருகிறான் (மேகலை அணிந்த பாலகனை ரசானுபாவமாக யூப ஸ்தம்பத்தோடு இங்கே ஒப்பிடுகிறார்கள்); இப்பிறப்பால் உயர்நிலை அடைகிறான்; தேவதைகளை வணங்கி வழிபடும் ரிஷிகள், பெரும் மகிழ்ச்சிகொண்டு அவனை வளரச் செய்கின்றனர்.”[2]