சிவ-ராம-கிருஷ்ணன்: மூன்று தத்துவங்கள்
இந்திய சம்பிரதாயங்களில் சிவன், ராமன், கிருஷ்ணன் எனும் தெய்வங்களை கற்றோரும், மற்றோரும் தொன்றுதொட்டு வணங்கி வருகின்றனர். ராமனும், கண்ணனும் வரலாற்றுக் கதாநாயகர்களெனில், சிவனோ ஒரு புராண புருஷன் ஆவான். ஆத்திகராயினும், நாத்திகராயினும் இம்முப்பெரும் தெய்வங்களின் கொள்கைகளைக் கடைபிடிப்பதன் மூலம் பெரிதும் பயன்பெறலாம். இதுவே சிவ-ராம-கிருஷ்ணர்களின் தன்மையாகும்.
